Seeman on Telangana Encounter - தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். இன்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தற்போது பேசியுள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான், “நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் வன்புணர்வுக்கு இதைப் போன்ற தண்டனையைத்தான் கொடுப்போம்,” என்று பகீர் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
“எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை தீர்வாகாது என்று நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், பெண்களை வெறுமனே ஒரு போகப் பொருளாக மற்றும் பார்த்து, வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்த தண்டனையும் தீர்வாகாது என்றும் நம்புகிறோம்.